Tuesday 13 January 2015

மருத்துவப்படி ரூபாய் 500 வழங்கிடக்கோரி

        மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு கடந்த 19-11-2014 முதல் உயர்த்தப்பட்ட மருத்துவப்படி (Medical Allowance) ரூபாய் 500/- உத்தரவு வெளியிடப்பட்டு வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு அமுல்படுத்தப்பட்டு பெற்றுவருகிறார்கள். ஆனால் அஞ்சலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு இன்றுவரை அது அமுலாகவில்லை. உயர்த்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்கிடக்கோரி அனைத்து அஞ்சலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம் வருகின்ற 12-01-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விட்டுள்ளது. 
   AIBDPA சங்க தோழர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்கிட AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

No comments:

Post a Comment