Thursday 9 January 2014

ஓய்வூதியர் மாவட்ட அமைப்புக்குழு கூட்டம்



காரைக்குடியில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனர் இரா. ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். ஓய்வூதிய அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தின்போது,
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக . கிருஷ்ணமூர்த்தி
(அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்),
செயலாளராக வி. சுப்பிரமணியன்
(பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் அமைப்பு),
பொருளாளராக எஸ். கோவிந்தராஜ்
(போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு)
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 இக்கூட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், இலவச பயண அட்டை வழங்கவேண்டும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை இவற்றில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

No comments:

Post a Comment